பிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

ஜூன் 21 முதல் சிதம்பரம் அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு!

சிதம்பரம் அருகே உள்ள சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வருகிற ஜூன் 21-ம் தேதி முதல் ஜூலை 2-ம் தேதி வரை நடைபெறுகிறது என கல்லூரி முதல்வர் மு.சுப்ரமணியன்

News image
Updated On :19 ஜூன் 2013, 12:59 pm

G.Sundararaj

சிதம்பரம் அருகே உள்ள சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வருகிற ஜூன் 21-ம் தேதி முதல் ஜூலை 2-ம் தேதி வரை நடைபெறுகிறது என கல்லூரி முதல்வர் மு.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

கலந்தாய்வு விபரம்: ஜூன் 21- சிறப்பு பிரிவினருக்கு (மாற்றுத் திறனாளி, விளையாட்டுத்திறன், முன்னாள் ராணுவத்தினர் வாரிசு, இலங்கை அகதி, மலைவாழ் பிரிவினர்); 24-ம் தேதி பிஎஸ்சி கணிதம், கணினி அறிவியல்; 25-ம் தேதி- பிஎஸ்சி இயற்பியல், பொதுவேதியியல்; 26-ம் தேதி -பிஎஸ்சி தொழிற் வேதியியல், விலங்கியல், தாவரயியல்; 27-ம் தேதி- பி.ஏ.தமிழ், ஆங்கிலம்; ஜூலை 1-ம் தேதி- பி.காம்., பி.பி.ஏ.,; ஜூலை 2-ம் தேதி- பி.ஏ பொருளியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகள்.

மேற்கண்ட பாடப்பிரிவுகளில் பிஏ தமிழ், ஆங்கிலம் தவிர ஏழைய பாடப்பிரிவுகளில் முதல் கட்ட கலந்தாய்வில் பிளஸ்டூ தேர்வின் பகுதி-3ல் 800க்கு மேலும், தமிவ் பாடப்பிரிவிற்கு பகுதி-3ல் சிறப்புத் தமிழ் படித்தவர்கள் அல்லது பகுதி-1 தமிழில் 120க்கும் மேலும், பி.ஏ ஆங்கில பாடப்பிரிவிற்கு பகுதி-2 ஆங்கிலத்தில் 120-க்கு மேலும் மதிப்பெண்கள் பெற்றவர்கள் மட்டுமே கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும் என முதல்வர் மு.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.