இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

நடத்தையில் சந்தேகம்: மனைவியை கொலை செய்த கணவர் கைது

சிதம்பரம் அருகே உள்ள புதுச்சத்திரம் காவல் சரகத்தைச் சேர்ந்த மேட்டுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜீவானந்தம், கூலித் தொழிலாளியான அவரது மனைவி பெயர் தேவகி 934). இவர்களுக்கு ஒரு மகன், மகள்

News image
Updated On :24 ஜூன் 2013, 11:22 am

G.Sundararaj

நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் சிதம்பரம் அருகே மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்த கணவரை போலீஸார் கைது செய்தனர்.

சிதம்பரம் அருகே உள்ள புதுச்சத்திரம் காவல் சரகத்தைச் சேர்ந்த மேட்டுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜீவானந்தம், கூலித் தொழிலாளியான அவரது மனைவி பெயர் தேவகி 934). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். மனைவி தேவகியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் இருவருக்கும் இடையே அடிக்கடை தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு வேலைக்கு சென்று வீடு திரும்பிய ஜீவானந்தத்திற்கும், தேவகிக்கும் இடையே நள்ளிரவில் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த ஜீவானந்தம் கத்தியால் மனைவியை சரமாரியாக தாக்கிவிட்டு தலைமறைவானார். இதில் படுகாயமுற்ற மனைவி தேவகி இறந்தார். தகவல் அறிந்த புதுச்சத்திரம் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்கு கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீஸார் வழக்குப் பதிந்து அதே பகுதியில் பதுங்கியிருந்த ஜீவானந்தத்தை கைது செய்தனர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.