இன்று தொடங்கிய மருத்துவப் படிப்பிற்கான கவுன்சிலிங்கில் கோவையைச் சேர்ந்த மாணவி ஆர்.ரம்யாலட்சுமி (1169), விழுப்புரத்தைச் சேர்ந்த எம்.சூரியகலா (1139), சேலத்தைச் சேர்ந்த எஸ்.எம்.சுருதி ஆகிய மூவரும் முதல் மூன்று ரேங்குகளை பெற்றனர். இவர்களுக்கு எம்பிபிஎஸ் படிப்பிற்கான அனுமதி சேர்க்கையை பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா ஐஏஎஸ் வெள்ளிக்கிழமை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பதிவாளர் (பொறுப்பு0 என்.பஞ்சநதம், மாவட்ட வருவாய் அதிகாரிகள் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், டி.கிருஸ்துராஜ், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஏ.ரகுபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.