தருவைகுளம் 60 வீடு காலனி பகுதியைச் சேர்ந்த ஞானபிரகாசத்துக்குச் சொந்தமான விசைப்படகில் அதே பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் (24), சுலைமான் மகன் அப்பாஸ் (38), ஜெய்னா மகன் அப்பாஸ் (59), நிஜாம் (45), ரபீக் (42) ஆகியோரும் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றிருந்தனர்.இதேபோல, வேம்பார் பகுதியைச் சேர்ந்த பால்பாண்டிக்கு சொந்தமான விசைப்படகில் தருவைகுளம் 100 வீடு காலனி பகுதியைச் சேர்ந்த ராஜன் (27), ரூபன் (23), செல்வராஜ் (55), தொம்மை அந்தோனி (50), முருகன் (35) ஆகியோரும், 60 வீடு காலனி பகுதியைச் சேர்ந்த ஆல்பர்ட் (27), சகாயமணி (25), குமார் (21), கென்னடி (50), ராபின் (26), மேன்லி (23) ஆகியோரும் மீன்பிடிக்க சென்றிருந்தனர்.தருவைகுளம் 100 வீடு காலனியைச் சேர்ந்த அந்தோனி மிக்கேல் தனது நாட்டுப் படகில் அதே பகுதியைச் சேர்ந்த அந்தோனிராஜ் (20), அந்தோனி சுதாகர் (30), கபீர்தாஸ் (38), ஹனிபா (43), அருள்ராஜ் (53) ஆகியோருடன் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றிருந்தார்.இந்த 22 மீனவர்களையும் அவர்கள் சென்ற விசைப்படகுகள் மற்றும் நாட்டுப் படகுடன் இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்றுள்ளனர். அவர்களை பத்திரமாக மீட்டுத் தர வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.