இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானத்தினை இந்தியா ஆதரிக்கும் என்றார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன்.
தாம்பரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி தொடர்பான நிகழ்ச்சி ஒன்றுக்கு வந்திருந்த அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தினை இந்தியா ஆதரிக்காது; மௌனம் காக்கிறது என்றெல்லாம் ஊடகங்களில் வரும் செய்திகள் முரணானவை என்றார். இலங்கை விவகாரத்தில், சீனா, பாகிஸ்தான் ஆகியவை வெறும் வர்த்தக உறவையே கொண்டுள்ளன, ஆனால் இந்தியா மட்டுமே இலங்கையுடன் நட்புறவு கொண்டுள்ளது. இந்தியாவின் அழுத்தத்தில் இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு நிச்சயம் நன்மையே கிடைக்கும். இலங்கையில் தமிழர் பகுதிகளின் வளர்ச்சிக்கு இந்தியா உறுதுணையாக இருக்கிறது என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஆகஸ்ட் 3 - நேரலை!

கபினியில் நீர் திறப்பு 27,000 கன அடியாக அதிகரிப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!

பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் முன்னிலை!
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview


