தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகேயுள்ள வடக்குமாநாடு பகுதியைச் சேர்ந்தவர் கந்தையா (31). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சுப்புலட்சுமிக்கும் கடந்த 20-1-2002 அன்று திருமணம் நடைபெற்றது. திருமணத்தில் போது பெண் வீட்டார் 30 பவுன் நகையை வரதட்சிணையாக வழங்கியதாகக் கூறப்படுகிறது.இந்நிலையில், கூடுதல் வரதட்சிணை கேட்டு கந்தையா அவரது தாய் பேச்சியம்மாள், சகோதரிகள் கௌரி (29), முத்துலட்சுமி (28), சரஸ்வதி (27) ஆகியோர் சுப்புலட்சுமியை சித்ரவதை செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த சுப்புலட்சுமி வீட்டில் இருந்தபோது 19-03-2008 அன்று தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம்.