2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!
/

விருத்தாசலம் ஜங்கஷனில் 10-ம் வகுப்பு தமிழ் இரண்டாம் தாள் விடைத்தாள் பார்சல் சேதம்!

கடலூர் மாவட்டத்தில்  நேற்று நடைபெற்ற தமிழ் 2-ம் தாள் தேர்வின் விடைத்தாள்கள் திருச்சி மண்டல இயக்குநர்கள் அலுவலகத்திற்கு விருத்தாசலம் ஜங்கஷனில் உள்ள ஆர்.எம்.எஸ்

News image
Updated On :29 மார்ச் 2013, 12:32 pm

G.Sundararaj

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஜங்கஷனிலிருந்து புறப்பட்ட ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து 10-ம் வகுப்பு விடைத்தாள்கள் கொண்ட பார்சல் கீழே விழுந்து சுக்குநூறாக சேதமுற்று கண்டெடுக்கப்பட்டது.

கடலூர் மாவட்டத்தில்  நேற்று நடைபெற்ற தமிழ் 2-ம் தாள் தேர்வின் விடைத்தாள்கள் திருச்சி மண்டல இயக்குநர்கள் அலுவலகத்திற்கு விருத்தாசலம் ஜங்கஷனில் உள்ள ஆர்.எம்.எஸ் போஸ்ட் ஆபீஸ் மூலம் பார்சல்கள்  நேற்று(வியாழக்கிழமை) நள்ளிரவு 2 மணிக்கு ராக்போர்ட் எக்ஸ்பிரஸில் ஏற்றப்பட்டது. ரயில் சிறுதுதூரம் சென்ற போது பார்சல் ஒன்று கீழே விழுந்ததாக தெரிகிறது. பார்சல் கீழே விழுந்தது குறித்து இன்று அதிகாலை வந்த திருச்சி ரயில் டிரைவர் கண்டுபிடித்து கூறியுள்ளார். அப்போது அதிகாரிகள் சென்று பார்த்த போது பார்சல் முற்றிலும் சேதமுற்று கிடந்ததை கண்டு அதிர்ச்சியுற்று, அதனை கண்டெடுத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேற்கண்ட பேப்பர் பார்சல் சிதம்பரத்தை அடுத்த பி.முட்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் எழுதிய விடைத்தாள்கள் எனக்கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.