அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

சிதம்பரத்தில் மூன்று பேருந்துகள் கண்ணாடி உடைப்பு!

சிதம்பரம் வடக்குமெயின் ரோட்டு கும்பகோணம் அரசு போக்குவரத்துக்கழக டெப்பா அருகே இன்று மதியம் கும்பகோணம்-சிதம்பரம் வந்த அரசு பேருந்தின் முன்புற கண்ணாடி மர்மஆசாமிகளால் கல்வீசி உடைக்கப்பட்டது. சிதம்பரம்

News image
Updated On :3 மே 2013, 9:30 am

G.Sundararaj

பாமக நிறுவனர் டாமதாஸ் கைது செய்யப்பட்டதை அடுத்த சிதம்பரம் பகுதியில் மூன்று பேருந்துகள் கண்ணாடி உடைக்கப்பட்டது.

சிதம்பரம் வடக்குமெயின் ரோட்டு கும்பகோணம் அரசு போக்குவரத்துக்கழக டெப்பா அருகே இன்று மதியம் கும்பகோணம்-சிதம்பரம் வந்த அரசு பேருந்தின் முன்புற கண்ணாடி மர்மஆசாமிகளால் கல்வீசி உடைக்கப்பட்டது. சிதம்பரம் அருகே துணிஞ்சிரமேடு கிராமத்தில்  நேற்று(வியாழக்கிழமை) நள்ளிரவு தனியார் பேருந்தின் கண்ணாடி கல்வீசி தாக்கி உடைக்கப்பட்டது. மேலும் சிதம்பரம் அருகே சீர்காழி சாலையில் வேளக்குடி எனுமிடத்தில் மயிலாடுதுறை சென்ற அரசு பேருந்து ஒன்றின் கண்ணாடி உடைக்கப்பட்டது.

தொடர்ந்த பேருந்து கண்ணாடி உடைப்பு சம்பவம் நடைபெறுவதால் சிதம்பரம் பகுதியிலிருந்து இரவு நேர பேருந்துகள் நிறுத்தப்பட்டதால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். சிலர் பேருந்து கிடைக்காமல் பயணிகள் சிதம்பரம் பஸ் நிலையத்திலும், அருகாமையில் உள்ள அரசு மருத்துவமனையில் நள்ளிரவு தங்கி காலை 6 மணிக்கு மேல் பேருந்தில் தங்களது ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.