அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

அண்ணாமலைப் பல்கலையில் துணைவேந்தரின் நேர்முக உதவியாளர் உள்ளிட்ட 5 பேர் அதிரடி இடமாற்றம்!

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நிதிநெருக்கடி மற்றும் நிதிமுறைகேடு காரணமாக தமிழகஅரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்ட பின்னர் தமிழகஅரசால் நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகி ஷிவ்தாஸ்

News image
Updated On :7 மே 2013, 9:20 am

G.Sundararaj

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தரின் நேர்முக உதவியாளர், பதிவாளரின் நேர்முக உதவியாளர் உள்ளிட்ட 5 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நிதிநெருக்கடி மற்றும் நிதிமுறைகேடு காரணமாக தமிழகஅரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்ட பின்னர் தமிழகஅரசால் நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகி ஷிவ்தாஸ் மீனா பல்வேறு நிர்வாக சீரமைப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தரின் நேர்முக உதவியாளராக இருந்த சி.ராஜசேகர் தேர்வுத்துறைக்கும், பதிவாளரின் நேர்முக உதவியாளராக இருந்த நடராஜன் விடுதி ஒருங்கிணைப்பாளர் அலுவலக உதவிப் பதிவாளராகவும், தனிஅலுவலர் ரவி செங்கோட்டை படிப்பு மையத்திற்கும், தொழில்நுட்ப உதவியாளர் செந்தில் மருத்துவக்கல்லூரிக்கும், தொழில்நுட்ப உதவியாளர் சரவணன் பரங்கிப்பேட்டையில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழக கடல்வாழ் உயிரின உயராய்வு மையத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.