அண்ணாமலைப் பல்கலைக்கழகம் பாரம்பரிய மிக்க கட்டடங்களை கொண்டது. அனைத்து வசதிகளையும், சிறந்த கல்வி பயிற்சியுடன் உள்ள இப்பல்கலைக்கழகத்தில் சுமார் 35 ஆயிரம் மாணவ, மாணவியர்கள் நேரடியாக பயிலும் பல்கலைக்கழகமாக திகழ்கிறது. தமிழகஅரசு பள்ளிக்கல்வித்துறை மூலம் மாணவர்களுக்கு சர்வசிக்க்ஷாஅபியான் திட்டம் மூலம் தொடக்கக்கல்வியும், கல்வி உதவித்தொகை, இலவச புத்தகம், இலவச சைக்கிள், சீருடை, காலணி, மேல்நிலைப்பள்ளி, கல்லூரி மற்றும் தொழில்நுட்பகல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் ஆகியவற்றை வழங்கி வருகிறது. 18 வருடங்களுக்கு முன்பு நான் படித்தபோது இந்த வசதிகள் எங்களுக்கு கிடையாது. எனவே மாணவர்கள் இந்த சலுகைகளை பயன்படுத்தி நன்றாக தகுதிகளையும், திறன்களையும் வளர்த்து கொள்ள வேண்டும் என ஆட்சியர் தெரிவித்தார்.