அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கள்ளத்தனமாக செம்மண் ஏற்றி வந்த லாரிகள் பறிமுதல்!

சிதம்பரம் வட்டாட்சியர் எம்.விஜயா இன்று காலை ரோந்து சென்ற போது சிதம்பரம் அருகே சி.முட்லூர்-பரங்கிப்பேட்டை சாலையில் செம்மண் ஏற்றி வந்த லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது காரைக்காடு

News image
Updated On :8 மே 2013, 9:40 am

G.Sundararaj

சிதம்பரம் அருகே அனுமதியின்றி கள்ளத்தனமாக செம்மண் ஏற்றி வந்த இரு லாரிகளை வட்டாட்சியர் எம்.விஜயா கைப்பற்றி பறிமுதல் செய்தார்.

சிதம்பரம் வட்டாட்சியர் எம்.விஜயா இன்று காலை ரோந்து சென்ற போது சிதம்பரம் அருகே சி.முட்லூர்-பரங்கிப்பேட்டை சாலையில் செம்மண் ஏற்றி வந்த லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது காரைக்காடு பகுதியிலிருந்து விழுப்புரம் வடவானூர் பகுதியைச் சேர்ந்த ஒட்டுநர் தனபால் ஒரு முறை அனுமதி சீட்டு பெற்று பலமுறை செம்மண் ஏற்றி வந்தது தெரியவந்து. இதனையடுத்து டிப்பர் லாரியை கைப்பற்றி சிதம்பரம் உதவிஆட்சியர் அலுவலகத்தில் மேல் நடவடிக்கைக்காக ஒப்படைத்தார்.

அதேபோன்று சேத்தியாத்தோப்பு-கீரப்பாளையம் மெயின்ரோட்டில் செம்மண் ஏற்றி வந்த லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது பாவைக்குளம் பகுதியைச் சேர்ந்த ஒட்டுநர் தனத்தம்பி என்பவர் ஒருமுறை அனுமதி சீட்டு பெற்று, பல முறை செம்மண் ஏற்றி வந்தது தெரியவந்து அந்த லாரியையும் வட்டாட்சியர் எம்.விஜயா கைப்பற்றி சிதம்பரம் உதவிஆட்சியர் அலுவலகத்தில் மேல் நடவடிக்கைக்காக ஒப்படைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.