பாமக பேரவைக் குழு தலைவராக செளமியா அன்புமணி தேர்வு!கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட உள்ளதாக தகவல்தமிழகத்தில் மே 17 வரை மிதமான மழை! வானிலை ஆய்வு மையம்அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக!
/

எடியூரப்பாவை மீண்டும் சேர்க்க முயற்சி எடுக்கவில்லை: பாஜக

எடியூரப்பாவை பாஜகவில் மீண்டும் சேர்ப்பதற்கான முயற்சிகளை எடுக்கவில்லை என்று அக்கட்சியின் மாநிலத்தலைவர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்தார்.

Updated On :12 மே 2013, 9:27 pm IST

எடியூரப்பாவை பாஜகவில் மீண்டும் சேர்ப்பதற்கான முயற்சிகளை எடுக்கவில்லை என்று அக்கட்சியின் மாநிலத்தலைவர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்தார்.

இது குறித்து பெங்களூரில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: பாஜகவில் இருந்து விலகி புதியகட்சி தொடங்கியுள்ள முன்னாள் முதல்வர் எடியூரப்பாவை மீண்டும் கட்சியில் சேர்க்கும் முயற்சியில் எதுவும் இதுவரை எடுக்கவில்லை. எடியூரப்பா மீண்டும் பாஜகவில் சேர முன்வந்தால், அது குறித்து கட்சி மேலிடம் முடிவு செய்யும்.

முன்னாள் முதல்வர்கள் கல்யாண் சிங், மதன் லால் குரானா, உமாபாரதி போல எடியூரப்பாவும் மீண்டும் பாஜகவுக்கு திரும்புவாரா? என்பது குறித்து நான் எதுவும் கூறமுடியாது. எடியூரப்பா கட்சியில் சேருவது தொடர்பான முன்மொழிவுகள் எதுவும் கட்சி தலைமையிடம் இல்லை.

எடியூரப்பாவின் கஜக, ஸ்ரீராமுலுவின் பிஎஸ்ஆர் காங்கிரஸ், பாஜகவின் வாக்குகளை பறித்து சென்றதை ஒப்புக் கொள்கிறேன். பாஜகவின் பாரம்பரிய வாக்குகள் 3 பங்குகளாக பிரிந்ததால், சட்டப்பேரவை தேர்தலில் கட்சி தோல்வியடைய நேர்ந்தது. அப்போதைய எங்கள் தலைவராக விளங்கிய எடியூரப்பா, கட்சியில் நிலவிய உள்சண்டைகள் மற்றும் முறைகேடுகளை தடுக்க தவறிவிட்டார். கட்சியில் இருந்து விலகிய எடியூரப்பா, ஆட்சி காலத்தில் செய்த முறைகேடுகளால் பாஜக தோல்வி அடைந்துள்ளது. மேலும், ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் தோல்வி அடைந்து விட்டோம். அதேபோல, மத்தியில் காங்கிரஸ் கட்சியின் மோசமான ஆட்சியை மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்வதிலும் தோல்வியை தழுவினோம்.

ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளதால், நாடெங்கும் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான மனநிலை நிலவுகிறது. மக்களவை தேர்தலில் கடந்த முறை கர்நாடகத்தில் வென்ற தொகுதிகளை தக்கவைத்து கொள்வோம். ஊழல், பயங்கரவாதம், தேசிய பாதுகாப்பு போன்ற விவகாரங்களில் காங்கிரஸ் அரசு மீது மக்கள் வெறுப்படைந்துள்ளனர். இந்தவிவகாரங்களை வாக்காளர்களிடம் கொண்டு சென்று, கடந்த முறை பெற்ற வெற்றியை உறுதி செய்வோம். மத்திய, மாநில தேர்தல்கள் வெவ்வேறு பிரச்னைகளை அடிப்படையாக கொண்டு நடக்கின்றன. எனவே, கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் மக்களவை தேர்தலை பாதிக்காது. மக்களவை தேர்தலில் கஜக, பிஎஸ்ஆர் காங்கிரஸ் கட்சிகள் எடுபடாது. காங்கிரஸ் ஆட்சி ஊழல் நிறைந்தது என்பதை மக்களிடம் கொண்டு சேர்ப்பதோடு, பாஜகவின் செல்வாக்கை பெருக்கவும் திட்டமிட்டு செயல்படுவோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.