சித்திரை மாத திருவாதிரை நக்ஷத்திரமான இன்று திருஞான சம்பந்தருக்கு திருமுலைப்பால் கொடுக்கும் விழா நடைபெற்று வருவது வழக்கம். சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்தரத்தன்று சீர்காழி திருத்தோணிபுரத்து ஈசர் கோயிலில் திருஞானசம்பந்தர் 3 வயதாக இருக்கும் போது தந்தை சிவபாத கிரிபாதருடன் குளத்திற்கு சென்றார். அப்போது சிவபாத கிரிபாதர் நீரில் மூழ்கி ஜபம் செய்யும் அகமர்ஷனஜபத்தில் ஈடுபட்டார். தந்தையை காணாதது கண்டு ஞானசம்பந்தர் குரலி்ட்டு அழுதார். இதனை பார்த்த சிவபெருமான், அம்பாளிடம் பால் வழங்குமாறு கூறினார். அம்பாள் குளக்கரையில் எழுந்தருளி தனது முலைப்பாலை, ஞானப்பாலாக தங்க கின்னத்தில் ஞானசம்பந்தருக்கு வழங்கி அழுகையை நிறுத்தியதாக வரலாறு கூறுகிறது.