கூட்டத்தில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் கே.வி.கண்ணன்பிள்ளை பங்கேற்று சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது: ஆதர்ஷ், 2 ஜி அலைக்கற்றை, நிலக்கரி சுரங்க ஊழல் என தினம் ஒரு ஊழலால் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் செயல் முகம்சுளிக்க வைத்துள்ளது. அமெரிக்க ஜனநாயகம் சிறப்பாக இருப்பதற்கு காரணம் அங்கு பத்திரிகை சுதந்திரம் உள்ளது. இந்தியாவில் பத்திரிகை சுதந்திரம் மேம்பட வேண்டும். பத்திரிகைகள் அரசை நல்வழிப்படும் நிலை வர வேண்டும். நீரின்றி அமையாது உலகு என பழமொழி உண்டு. உலகில் உள்ள 100 சதவீத நீரில் 97.5 சதவீத நீர் உப்பு, காரம், அமிலம் கலந்துள்ளதால் குடிக்க லாயக்கற்றது. மீதமுள்ள 2.5 சதவீத நீர்தான் குடிப்பதற்கு உகந்த நீராகும். இதில் 2.24 சதவீத நீர் தென் மற்றும் வட துருவத்தில் பணிப்பாறைகளாக உள்ளது. மீதமுள்ள 26 சதவீத நீரைதான் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு பயன்படு்த்துவதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன. 2022ல் குடிநீர் கிடைக்காமல் அவதியுறும் நிலை ஏற்படும். அதிர்ஷ்டவசமாக தமிழகத்தில் அதிக நீர் உள்ளது. ஆனால் நீரை நாம் முறையாக சேமிக்கவில்லை. மழைநீர் வீனாக கடலில் சென்று கலக்கிறது. கடலில் கலக்கும் நீரை சேமிக்க வேண்டும். எனவே விவசாயிகள் விழிப்புணர்வுடன் செயல்பட்டு நாமே குளம், குட்டைகளில் உள்ள ஆகாயத் தாமரைகளை அகற்ற வேண்டும், வாய்க்கால்களை சீரமைக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.