கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

நெல்லை மாவட்டத்தில் மழை நீடிப்பு: அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் 2 ஆவது நாளாக மழை பெய்து வருவதால் இயல்வு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையில் பலத்த மழை பெய்ததால் அணைகளுக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது.

News image
Updated On :3 நவம்பர் 2013, 2:49 pm

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி மாவட்டத்தில் 2 ஆவது நாளாக மழை பெய்து வருவதால் இயல்வு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையில் பலத்த மழை பெய்ததால் அணைகளுக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கி பெய்து வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் 2 ஆ வது நாளாக ஞாயிற்றுக்கிழமை மழை பெய்து வருகிறது. இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி பாபநாசம் அணையில் அதிகபட்சம் 73 மி.மீ மழையும், பாபநாசம் கீழ் அணையில் 38 மி.மீ மழையும், மணிமுத்தாறு அணையில் 62.4 மி.மீ மழையும், கடனாநதி அணையில் 6 மி.மீ மழையும், ராமநதி அணையில் 4 மி.மீ மழையும், அம்பாசமுத்திரத்தில் 39.2 மி.மீ மழையும், சேரன்மகாதேவியில் 76 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்து வரும் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 1483.49 கனஅடியும், மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 1227 கனஅடியும் நீர்வரத்து இருந்தது. இதனை தொடர்ந்து பாபநாசம் அணையின் நீர்மட்டம் 1.30 அடியும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 2 அடியும் உயர்ந்துள்ளது. பாபநாசம் அணையில் இருந்து தாமிரவருணி ஆற்றில் 903.50 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

மணிமுத்தாறு அணை மூடப்பட்டது. கடனாநதி அணைக்கு விநாடிக்கு 45 கனஅடியும், ராமநதி அணைக்கு விநாடிக்கு 20 கனஅடியும் நீர்வரத்து இருந்தது. கடனாநதி அணையில் இருந்து பாசனத்திற்கு 45 கனஅடியும், ராமநதி அணையில் இருந்து 30 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவ மழை நீடித்து வருவதால் திருநெல்வேலி மாவட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.