கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

சிறப்பு காவல் இளைஞர் படைத் தேர்வு: நெல்லை மாவட்டத்தில் 7,549 பேர் எழுதினர்

தமிழக காவல்துறையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சிறப்பு காவல் இளைஞர் படை பணியிடத்துக்கான எழுத்துத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை மாநிலம் முழுவதும் நடைபெற்றது.திருநெல்வேலி மாவட்டத்தில்

News image
Updated On :10 நவம்பர் 2013, 10:37 am

ஷேக் அப்துல்காதர்

சிறப்பு காவல் இளைஞர் படைக்கான எழுத்துத் தேர்வில் திருநெல்வேலி மாவட்டத்தில் 7,549 இளைஞர்கள் ஞாயிற்றுக்கிழமை பங்கேற்றனர். 5 மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது.

தமிழக காவல்துறையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சிறப்பு காவல் இளைஞர் படை பணியிடத்துக்கான எழுத்துத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை மாநிலம் முழுவதும் நடைபெற்றது.திருநெல்வேலி மாவட்டத்தில் பாளையங்கோட்டை சாராள் தக்கர் மேல்நிலைப் பள்ளி, தூய யோவான் கல்லூரி, தூய யோவான் மேல்நிலைப் பள்ளி, புனித சவேரியார் பள்ளி மற்றும் வண்ணார்பேட்டை எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரி ஆகிய 5 மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது.

தேர்வில் திருநெல்வேலி மாநகர் பகுதியை சேர்ந்த 749 பேரும், புறநகர் பகுதியை சேர்ந்த 6,220 பேரும் பங்கேற்றனர். தேர்வு நடைபெறும் மையங்களை திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் சுமித்சரண், திருநெல்வேலி எஸ்.பி. விஜேந்திரபிதரி மற்றும் காவல்துறை அதிகாரிகள் பார்வையிட்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.