கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

நில மோசடி: ஓய்வுபெற்ற சார் பதிவாளர் உள்பட 4 பேர் கைது

அம்பாசமுத்திரத்தில் போலியாக ஆவணங்கள் தயாரித்து நிலத்தை அபகரித்து மோசடி செய்த வழக்கில் ஓய்வுபெற்ற சார் பதிவாளர், அவரது மனைவி உள்ளிட்ட 4 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது

News image
Updated On :16 நவம்பர் 2013, 3:28 pm

ஷேக் அப்துல்காதர்

அம்பாசமுத்திரத்தில் போலியாக ஆவணங்கள் தயாரித்து நிலத்தை அபகரித்து மோசடி செய்த வழக்கில் ஓய்வுபெற்ற சார் பதிவாளர், அவரது மனைவி உள்ளிட்ட 4 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். மேலும் இருவரை தேடி வருகின்றனர்.

அம்பாசமுத்திரம் திலகர்புரம் பிரதான சாலையை சேர்ந்த சங்கரலிங்கம் மகன் ராமசாமி (75). இவருக்கு சொந்தமான நிலம் அம்பாசமுத்திரம் அருகே மேலஅம்பாசமுத்திரம் கிராமத்தில் 1.75 ஏக்கர் நிலங்கள் உள்ளது. மேற்படி நிலத்தில் ராமசாமி விவசாயம் செய்து வருகிறார்.இதனிடையே அம்பாசமுத்திரம் அருகே கோடாரங்குளத்தை சேர்ந்த ராமசாமி மகன் கருத்தபாண்டி (50). அம்பாசமுத்திரம் வேலாயுதம்நகரை சேர்ந்த நெல்லையப்பன் மகன் ஓய்வுபெற்ற சார்பதிவாளர் ஆதிமூலம் (63).

கருத்தபாண்டியும், ஆதிமூலமும் சேர்ந்து ராமசாமி பெயரில் உள்ள நிலத்தை கருத்தபாண்டியின் தந்தை ராமசாமிக்கு சொந்தமானது என போலியாக ஆவணங்கள் தயாரித்து, அவர் இறந்து விட்டதால் கடந்த 02.05.2012 அன்று வாரிசு நிலைமையில் கருத்தபாண்டி, ஆதிமூலம் மனைவி செல்வி பெயருக்கு விற்பனை ஆவணம் தயாரித்து அம்பாசமுத்திரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்தனராம்.விற்பனை ஆவணத்தை அப்போதைய சார் பதிவாளர் சச்சிதானந்தம் பதிவு செய்தாராம். பத்திரத்தில் கருத்தபாண்டி மனைவி முப்புடாதி, ஆதிமூலம் மகன் கயல்குமார் ஆகியோர் சாட்சி கையெழுத்திட்டுள்ளனர். நிலம் தனக்கு சொந்தமானது என ஆதிமூலம் தெரிவித்தாராம்.

அதிர்ச்சியடைந்த சொத்தின் உரிமையாளர் ராமசாமி திருநெல்வேலி எஸ்.பி. யிடம் புகார் செய்தார். இது குறித்து அம்பாசமுத்திரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். இதில் கருத்தபாண்டி, ஓய்வுபெற்ற சார் பதிவாளர் ஆதிமூலம், அவரது மனைவி செல்வி, மகன் கயல்குமார் ஆகியோரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

வழக்கில் தொடர்புடைய சார் பதிவாளர் சச்சிதானந்தம், கருத்தபாண்டி மனைவி முப்புடாதி ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.