சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

பாளை. அருகே தங்கையை கொன்ற அண்ணன்கள் கைது

பாளையங்கோட்டை அருகே காதலனுடன் சென்ற தங்கைக்கு விஷம் கொடுத்து கொலை செய்து தூக்கில் தொங்க விட்ட சகோதரர்களை வெள்ளிக்கிழமை போலீஸார் கைது செய்தனர்.

News image
Updated On :14 செப்டம்பர் 2013, 5:24 am

ஷேக் அப்துல்காதர்

பாளையங்கோட்டை அருகே காதலனுடன் சென்ற தங்கைக்கு விஷம் கொடுத்து கொலை செய்து தூக்கில் தொங்க விட்ட சகோதரர்களை வெள்ளிக்கிழமை போலீஸார் கைது செய்தனர்.

பாளையங்கோட்டை அருகே சீவலப்பேரியை சேர்ந்த மாயாண்டி. இவரது மகள் கோமதி (18). தூத்துக்குடி மாவட்டம், திருவேங்கடநாதபுரம் பகுதியை சேர்ந்த சக்திவேல் மகன் முருகன் (22). இருவரும் தூத்துக்குடி அருகே புதுப்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர். இருவரும் காதலித்து வந்தனராம். 

இதற்கிடையே கோமதி, தனது காதலனுடன் சென்று விட்டதாக கூறப்படுகிறது.  இதையறிந்த கோமதியின் சகோதரர்கள் முருகன் (24), சுடலைமுத்து (20) ஆகியோர் தங்கையிடம் சென்று சமாதானம் பேசி வெள்ளிக்கிழமை வீட்டுக்கு அழைத்து வந்தனராம்.

வீட்டுக்கு அழைத்து வந்த கோமதிக்கு, முருகன், சுடலைமுத்துவும் வாயில் விஷத்தை ஊற்றி தூக்கில் தொங்க விட்டனராம். தகவலறிந்த சீவலப்பேரி போலீஸார் கோமதியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்ய அனுப்பினர். போலீஸார் வழக்குப் பதிந்து முருகன், சுடலைமுத்துவை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.