கன்னியாகுமரி பகவதியம்மன் நவராத்திரி திருவிழா: அக். 5-ல் தொடங்குகிறது.
முதல் நாள் அதிகாலை 5 மணிக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7.30 மணிக்கு அம்பாள் கொலு மண்டபத்தில் எழுந்தருளுதல், காலை 8 மணிக்கு கன்னியா பூஜை, காலை 10 மணிக்கு சிறப்பு அபிஷேகம், பிற்பகல் 12 மணிக்கு அன்னதானம், மாலை 6 மணிக்கு ஆன்மீக உரை, இரவு 9 மணிக்கு தேவி வெள்ளிக் கலைமான் வாகனத்தில் திருக்கோவில் சுற்றி பவனி வருதல் நடைபெறும்.










