புதுதில்லியில் வெள்ளிக்கிழமை அதிமுக்கியத்துவம் வாய்ந்த இந்திய-இலங்கை மீனவர்களுக்கு இடையேயான பிரச்னை, இலங்கை ராணுவத்தால் இந்திய மீனவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து விவாதிக்கப்படும் கூட்டுக்குழுக் கூட்டத்தில் மத்தியில் ஆளும் மோடி அரசு, புதுவை மாநிலத்துக்கு அளிக்க வேண்டிய பிரதிநித்துவத்தை அளிக்காமல் புறக்கணித்துள்ளது.இக்கூட்டுக்குழுக் கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் மீன்வளத்துறை அமைச்சர் கேஏ.ஜெயபால், மீன்வளத்துறை செயலர் விஜயகுமார், ஆணையர் பீலா ராஜேஷ், ஆகியோர் முதல்வர் ஜெயலலிதா உத்தரவின்பேரில் பங்கேற்று தமிழக மீனவர்கள் அடையும் பாதிப்பு, பரந்த அளவிலான மீன்பிடி உரிமை குறித்து பதிவு செய்து விவாதிக்கின்றனர்.