தூத்துக்குடியில் உள்ள 4 தனியார் பள்ளிகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக தொலைபேசி மூலம் மிரட்டல் வந்துள்ளது.
திருநெல்வேலி மாநகர காவல்துறைக் கட்டுப்பாட்டு அறைக்கு 9 மணியளவில் தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், தூத்துக்குடியில் இயங்கும் 4 தனியார் பள்ளிகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், அவை இன்னும் சிறிது நேரத்தில் வெடிக்கும் எனக் கூறினார்.
இதையடுத்து, தூத்துக்குடி பகுதி போலீசாருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அப்பகுதியில் உள்ள பள்ளிகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினர் சோதனை நடத்தியதில் எந்த வெடிகுண்டும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால், இந்த அழைப்பு வெறும் மிரட்டல் என்பது தெரிய வந்து.
விசாரணையில் இந்த அழைப்பு தூத்துக்குடி வட்டக்கோயில் அருகே ஒரு பொதுத் தொலைபேசி அழைப்பில் இருந்து வந்தது என்று தெரிய வந்துள்ளது. மேலும், தொலைபேசியில் பேசியது யார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொகுதி அறிமுகம்: அரங்கநாதா், வனபத்திரகாளியம்மன், மலை ரயிலால் புகழ்பெற்ற மேட்டுப்பாளையம்!

கருணாநிதி போட்டியிடாத ஒரே தேர்தல்!

மதுரை தெற்கு! எதிர்பார்ப்பில் நெசவாளர்கள்!

தொடர்ந்து 7வது ஆண்டாக ஜமா மசூதியில் தொழுகைக்குத் தடை!
வீடியோக்கள்

வதந்தி - 2 டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

