இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையை முற்றுகையிட தி.மு.க.வினர் முயற்சி:

ஸ்ரீவில்லிபுத்தூர்.விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையை திங்கள்கிழமை திடீரென தி.மு.க.வினர் முற்றுகையிடச் சென்றதால் பதற்றம் ஏற்பட்டது.

News image
Updated On :29 டிசம்பர் 2014, 6:22 am

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர்.விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையை திங்கள்கிழமை திடீரென தி.மு.க.வினர் முற்றுகையிடச் சென்றதால் பதற்றம் ஏற்பட்டது.

போலீஸார் இவர்களை தடுத்து நிறுத்தி சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையின் நுழைவு வாயில் அருகே அ.தி.மு.க. நகரச் செயலாளர் வி.டி.முத்துராஜ், ஒன்றியக் குழுத் தலைவர் கே.காளிமுத்து, கட்சியின் நகர் பொருளாளர் கருமாரி எஸ்.முருகன், வத்திராயிருப்பு ஒன்றியச் செயலாளர் சுப்புராஜ் ஆகியோர் இருந்து பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் இன்றி அனைத்து அரசு பேருந்துகளையும் இயக்க கடந்த இரு நாட்களாக தீவிர முயற்சி எடுத்துக் கொண்டருந்தனர். இதனால் ஸ்ரீவில்லிபுத்தூர் பணிமனையில் உள்ள 64 பேருந்துகளில் 54 இயக்கப்பட்டது.

இதனை அறிந்த தி.மு.க.வினர், கட்சியின் நகரச் செயலாளர் வழக்குரைஞர் ஜி.ஜி.அய்யாவுப்பாண்டியன், ஒன்றியச் செயலாளர் கு.ஆறுமுகம் ஆகியோர் தலைமையில் திங்கள்கிழமை அரசு போக்குவரத்துக் கழக பணிமனையை முற்றுகையிட்டு அ.தி.மு.க.வினரை பணிமனையிலிருந்து வெளியேற்ற வலியுறுத்த சென்றனர்.இதனை அறிந்த போலீஸார் இவர்களை பணிமனைக்கு சற்று முன்பே தடுத்து நிறுத்தினர். அவர்களிடம் டி.எஸ்.பி. முரளிதரன் பேச்சு வார்த்தை நடத்தினார்.

144 தடை உத்தரவு அமலலில் உள்ளது. கூட்டமாக யாரும் செல்லக் கூடாது என்றார். அப்போது தி.மு.க. வினர் அ.தி.மு.க.வினரை பணிமனையிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று கோரினர். இல்லையென்றால் செவ்வாய்கிழமை தொகுதி முழுவதும் பஸ் மறியலில் ஈடுபடுவோம் என்று எச்சரித்தனர். பின்னர் போலீஸார் அலுவலகத்திற்கு வாருங்கள் பேசிக்கொள்வோம் என்று கூறியதையடுத்து தி.மு.க.வினர் கலைந்து சென்றனர்.இதனால் இப் பகுதியில் சற்று நேரம் பரபரப்பு காணப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.