போலீஸார் இவர்களை தடுத்து நிறுத்தி சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையின் நுழைவு வாயில் அருகே அ.தி.மு.க. நகரச் செயலாளர் வி.டி.முத்துராஜ், ஒன்றியக் குழுத் தலைவர் கே.காளிமுத்து, கட்சியின் நகர் பொருளாளர் கருமாரி எஸ்.முருகன், வத்திராயிருப்பு ஒன்றியச் செயலாளர் சுப்புராஜ் ஆகியோர் இருந்து பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் இன்றி அனைத்து அரசு பேருந்துகளையும் இயக்க கடந்த இரு நாட்களாக தீவிர முயற்சி எடுத்துக் கொண்டருந்தனர். இதனால் ஸ்ரீவில்லிபுத்தூர் பணிமனையில் உள்ள 64 பேருந்துகளில் 54 இயக்கப்பட்டது.