பழனி மலைக்கோயில் உண்டியல் காணிக்கை. 24 நாள் வரவு ரூ.1.71 கோடியை தாண்டியது
இதில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய ரொக்கப்பணம் வரவு ரூபாய் ஒரு கோடியே 71 லட்சத்து 24 ஆயிரத்து 625 கிடைத்தது. உண்டியலில் பக்தர்கள் தங்கத்தாலான காசுகள், தாலி, செயின், வேல், உருவங்களும், வெள்ளியால் ஆன வேல், உருவம், ஒட்டியாணம், கைவளையம், கொலுசுகள், பார் வெள்ளி, சுவாமி உருவம், வீடு போன்றவற்றையும் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.










