இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

நகைக்கடை உரிமையாளர் மகன் கடத்தல்

தருமபுரி கடை வீதியை சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் அபிஜீத்(22). இவர்கள் அதே பகுதியில் நகைக்கடை வைத்து நடத்தி வருகின்றனர். கடையை தந்தையும், மகனும் கவனித்து வருகின்றனர்.இந்த

News image
Updated On :26 ஜனவரி 2014, 12:20 pm

ராதாகிருஷ்ணன்

தருமபுரியில் நகைக்கடை உரிமையாளர் மகன் கடத்தப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தருமபுரி கடை வீதியை சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் அபிஜீத்(22). இவர்கள் அதே பகுதியில் நகைக்கடை வைத்து நடத்தி வருகின்றனர். கடையை தந்தையும், மகனும் கவனித்து வருகின்றனர்.இந்த நிலையில், வெள்ளிக்கிழமை வழக்கம் போல் விற்பனை முடிந்து கடையை அபிஜீத் பூட்டிச் சென்றாராம். ஆனால், அவர் வீடு திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது.

இதில், வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால், சங்கர் பல்வேறு இடங்களில் மகனை தேடியுள்ளார். ஆனால், அவர் எங்கு சென்றார் என்பது குறித்து விவரம் தெரியவரவில்லையாம்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை சங்கர் தருமபுரி நகர காவல் நிலையத்தில், தனது மகன் அபிஜீத்தை மர்ம நபர்கள் கடத்திச் சென்றிருப்பதாகவும், அவர்கள் தன்னிடம் தொடர்பு கொண்டு ரூ. 50 லட்சம் பணத்தை கேட்டதாகவும், தனது மகனை மீட்டு தருமாறு புகார் அளித்தார்.புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஸ்ராகர்க் உத்தரவின் பேரில் தனிப்படை போலீஸôர் காணாமல் போன அபிஜீத்தை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.