விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

சட்டக்கல்லூரி மாணவர்கள் மறியல்: 50 பேர் கைது

புதுச்சேரி அரசு சட்டக்கல்லூரியில் மொத்தம் 65 இடங்கள் உள்ளன. இதில் 60 இடங்கள் நிரப்பப்பட்டுவிட்டது. மீதமுள்ள 5 இடங்கள் காலியாக உள்ளது. இந்த காலியிடங்களை நிரப்பாமல்  மாணவர்கள் சேர்க்கையை ரத்து

News image
Updated On :30 அக்டோபர் 2014, 9:34 am

சுஜித்குமார்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுவையில் வியாழக்கிழமை சாலை மறியல் செய்த அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் 50 பேரை போலீஸார் கைது செய்தனர்.

புதுச்சேரி அரசு சட்டக்கல்லூரியில் மொத்தம் 65 இடங்கள் உள்ளன. இதில் 60 இடங்கள் நிரப்பப்பட்டுவிட்டது. மீதமுள்ள 5 இடங்கள் காலியாக உள்ளது. இந்த காலியிடங்களை நிரப்பாமல்  மாணவர்கள் சேர்க்கையை ரத்து செய்ய கல்லூரி நிர்வாகம் முடிவெடுத்தது. நிர்வாகத்தின்  இந்த முடிவால் இனி வரும் ஆண்டுகளிலும் 60 இடங்களாக குறையும் அபாயம் உள்ளது.

இந்த முடிவை அரசு கைவிட்டு மாணவர்களின் சேர்க்கையை நடத்தி மீதமுளள 5 இடங்களையும் நிரப்ப  வேண்டும் என வலியுறுத்தி மாணவர்கள் கூட்டமைப்பு தலைவர் சுவாமிநாதன்  தலைமையில் சட்டக்கல்லூரி மாணவர்கள் புதுச்சேரி காமராஜர் சிலை சதுக்கம் முன்பு  மறியலில் ஈடுபட்டனர். மறியலின்போது கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதையடுத்து போலீசார் மறியலில் ஈடுபட்ட 50 பேரை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.