வந்தவாசி அருகே சமையல் செய்யும்போது தீப்பற்றியதில் வாய் பேச முடியாத பெண் உயிரிழந்தார்.
வந்தவாசியை அடுத்த சத்தியவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் தேவேந்திரன் மகள் ராஜேஸ்வரி(22). இவர் வாய் பேச முடியாதவர். கடந்த திங்கள்கிழமை ராஜேஸ்வரி வீட்டில் பம்ப் ஸ்டவ்வில் சமையல் செய்து கொண்டிருந்தாராம். அப்போது ஸ்டவ் பர்னர் வெடித்ததில் ராஜேஸ்வரி மீது தீப்பற்றியது. இதில் பலத்த காயமடைந்த அவர் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் வியாழக்கிழமை இறந்தார். இதுகுறித்து தேவேந்திரன அளித்த புகாரின்பேரில் தெள்ளாறு போலீஸôர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.