ஜம்மு-காஷ்மீர் பேரழிவு: புதுவை அரசு 1 கோடி நிவாரணம்
பலத்த மழை, வெள்ளத்தால் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 250-க்கு மேற்பட்டோர் உயிரிழந்து விட்டனர். மேலும் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பல்வேறு மாநில அரசுகள் நிவாரண உதவி,


ஜம்மு-காஷ்மீர் பேரழிவை முன்னிட்டு புதுச்சேரி மாநில அரசு சார்பில் ரூ.1 கோடி நிவாரணத் தொகை வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி சட்டப்பேரவையில் திங்கள்கிழமை அறிவித்தார்.
பலத்த மழை, வெள்ளத்தால் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 250-க்கு மேற்பட்டோர் உயிரிழந்து விட்டனர். மேலும் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பல்வேறு மாநில அரசுகள் நிவாரண உதவி, பொருள்களை வழங்கி வருகின்றன.கடந்த வாரம் புதுவை பேரவையில் அதிமுக உறுப்பினர் அன்பழகன் பேசுகையில்: காஷ்மீர் பேரழிவுக்காக புதுவை அரசு நிவாரணத் தொகை வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அப்போது முதல்வர் ரங்கசாமி இதுகுறித்து விரைவில் அறிவிப்பேன் என்றார்.அதன்படி பேரழிவால் பாதிக்கப்பட்ட காஷ்மீருக்கு புதுவை அரசு சார்பில் ரூ. 1 கோடி வழங்கப்படும் முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.அப்போது முதல்வர் ரங்கசாமி கூறியதாவது:
காஷ்மீரில் பெரு வெள்ளம் ஏற்பட்டு பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக உறுப்பினர்கள் அன்பழகன், பாலன் ஆகியோர் நிவாரணம் தர வேண்டும் எனக் கோரினர். புதுவை அரசு சார்பில் ரூ. 1 கோடி நிவாரணம் வழங்கப்படும். அரசு ஊழியர்கள் விரும்பினால் 1 நாள் சம்பளத்தை அளிக்கலாம் வழங்கலாம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...