ஸ்ரீவில்லிபுத்தூரில் இளம் பெண் மகளுடன் காணவில்லை என புகார்
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் இளம் பெண் தனது 4 வயது மகனுடன் காணாமல் போய்விட்டதாய் போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.


விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் இளம் பெண் தனது 4 வயது மகனுடன் காணாமல் போய்விட்டதாய் போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர், பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் ந.காஜாமுகைதீன் (50). இவரது மகள் முர்ஷிதா பேகம் (25) என்பவரை சென்னையைச் சேர்ந்த சுக்கூர் என்பவருக்கு 2010-க்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார். இதனால் இவர்களுக்கு சுனவில் (4) என்ற மகன் உண்டு. மகள் நடவடிக்கை சரியில்லை என்று கேள்விப்பட்ட காஜாமுகைதீன் 20.3.15-ம் தேதி சென்னை சென்று, மகளையும் மருமகளையும் சமாதானம் செய்து வைத்துள்ளார். மேலும் மகளையும், பேரனையும் தன்னுடன் ஸ்ரீவில்லிபுத்தூர் அழைத்து வந்துள்ளார்.
இதற்கிடையை வீட்டில் இருந்த முர்ஷிதா பேகம் மற்றும் சுனவில் ஆகியோரை 23.3.15-ம் தேதி முதல் காணவில்லையாம். பல இடங்களில் தேடியும் கிடைக்காததையடுத்து ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் காஜாமுகைதீன் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து தாய் மற்றும் மகனை தேடி வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...