சிதம்பரத்தில் ரயில் மறியில்: இரு எம்எல்ஏக்கள் உள்ளிட்ட 150 பேர் கைது
சிதம்பரத்தில் ரயில் மறியலில் ஈடுபட்ட இரு எம்எல்ஏக்கள் உள்ளிட்ட 150 பேரை நகர போலீஸார் கைது செய்தனர்.


சிதம்பரத்தில் ரயில் மறியலில் ஈடுபட்ட இரு எம்எல்ஏக்கள் உள்ளிட்ட 150 பேரை நகர போலீஸார் கைது செய்தனர்.
காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடகஅரசு அணைக்கட்ட முயற்சிப்பதை கண்டித்தும், காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம், காவிரி நீர் ஒழுங்காற்று குழு ஆகியவற்றை அமைக்காமல் காலம் கடத்தி வரும் மத்திய அரசை கண்டித்தும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் சிதம்பரம் ரயில் நிலையத்தில் இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது.
மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ (சிதம்பரம்), இந்திய கம்யூ கட்சி விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் வி.பொண்ணுபாண்டியன் எம்எல்ஏ (ஸ்ரீவில்லிபுத்தூர்), மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி மாநிலக்குழு உறுப்பினர் மூசா, நகரச் செயலாளர் ஆர்.ராமச்சந்திரன், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் கோ.மாதவன், ஒன்றியச் செயலாளர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, இந்திய கம்யூ கட்சி விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் வி.எம்.சேகர், மாவட்டத் தலைவர் ஏ.பி.நாகராஜன் உள்ளிட்டோர் சிதம்பரம் ரயில்நிலையத்தில் வியாழக்கிழமை காலை திருச்சி-சென்னை செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சிதம்பரம் டிஎஸ்புி எஸ்.சுந்தரவடிவேலு தலைமையிலான நகர போலீஸார் மறியலில் ஈடுபட்ட இரு எம்எல்ஏக்கள், 31 பெண்கள் உள்ளிட்ட 150 பேரை கைது செய்து மாலை விடுவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...