அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் உலக மாற்றுத் திறனாளிகள் நாள் விழிப்புணர்வு பேரணி

ஸ்ரீவில்லிபுத்தூர்.அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டி, புதன்கிழமை

News image
Updated On :2 டிசம்பர் 2015, 9:54 am

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர்.அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டி, புதன்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூரில் மாற்றுத் திறனுடைய குழந்தைகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி வட்டார வளமைய மேற்பார்வையாளர் எஸ்.மாடசாமி தலைமையில் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அ.புகழேந்தி, பேரணியைத் தொடங்கி வைத்து உரையாற்றுகையில் கூறியதாவது: உலக மாற்றுத் திறனாளிகள் நாள் டிசம்பர் 3-ம் தேதி (வியாழக்கிழமை) அனுசரிக்கப்படுகிறது. அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மாற்றுத் திறனுடைய குழந்தைகளுக்கான உள்ளடக்கிய கல்வித் திட்டத்தின் கீழ் பலதரப்பட்ட சிறப்பு மாணவர்கள், மற்ற சக மாணவர்களுடன் இணைந்து படித்து வருகிறார்கள். இதனால் அவர்கள் சமூக வாழ்கையைில் தன்னம்பிக்கையுடன் செயல்பட வழி கிடைத்துள்ளது.

மேலும் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு ஊன்றுகோலாக விளங்கிடும் உள்ளடக்கிய கல்வியின் வாயிலாக மாணவர்களை பயனடையச் செய்ய அவர்களை பள்ளியில் தக்கவைத்தல் வேண்டும். அதற்காக பல்வேறு செயல்திட்டங்களை மத்திய மாநில அரசுகள் செய்து வருகிறது என்றார் அவர்.பேரணியில் ஆசிரியப் பயிற்றுநர்கள் மற்றும் சிறப்பு ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.