எல்லோருக்கும் கல்வி, தரமான கல்வி என்பது இன்றைய தமிழகக் கல்வித் துறையின் சூளுரையாகும். அனைத்து நிலையில் உள்ள மாணவர்களின் கற்றல் மகிழ்ச்சியுடன் அமைய வேண்டும் என்றார் அவர். பயிற்சியின் கருத்தாளர்களாக எம்.வேணி, வி.மருதக்காளை, த.கணேஷ்வரி, எஸ்.மாரியப்பன், ஜி.தர்மர், எம்.கனகலட்சுமி, ஏ.ஜூடு அமலன், எம்.மீனலோஷினி, பி.கற்பகம், எஸ்.முத்துலட்சுமி, எஸ்.சுந்தரேஸ்வரி ஆகியோர் செயல்பட்டனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை முதன்மைக் கல்வி அதிகாரி அ.புகழேந்தி உத்தரவின்படி, உதவி திட்ட அலுவலர் கே.நல்லதம்பி செய்திருந்தார். 11 மையங்களில் நடைபெற்ற இப் பயிற்சியில் 459 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.