அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் வெடி பொருள் கண்டெடுப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர்.விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் சனிக்கிழமை வெடி பொருள் கண்டெடுக்கப்பட்டது.

News image
Updated On :6 டிசம்பர் 2015, 3:37 am

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் சனிக்கிழமை வெடி பொருள் கண்டெடுக்கப்பட்டது.

ஆண்டாள் கோவில் கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை பூஜைகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கவுள்ள நிலையில் வெடிபொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து கோவிலுக்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் கோவில் கும்பாபிஷேகம் ஜனவரி 20-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான யாகசாலை பூஜைகள் டிசம்பர் 6 (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கவுள்ளது. இந்நிலையில் சனிக்கிழமை கோவில் விமானத்திற்கு தங்கத்தகடு பதிக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும் இடத்திற்கு அருகே வெடிபொருள் கிடந்துள்ளது.

 இது குறித்து வெடிகுண்டு தடுப்பு காவல் துறைக்கு தகவல் கிடைத்து அவர்கள் வந்து அந்த வெடி பொருளை கைப்பற்றினர். சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் வந்திருந்து பார்வையிட்டார். கோவிலில் வெடிபொருள் கண்டெடுக்கப்பட்டதையடுத்து, கோவிலுக்கு மேலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.