அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

கடலூர் வெள்ள பாதிப்பு: அரிமா சங்கம் ஒரு கிராமத்தைத் தத்தெடுத்து நிவாரண உதவி

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கடலூர் மாவட்டத்தின் ஒரு கிராமத்தைத் தத்தெடுத்து, அங்குள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை ஸ்ரீவில்லிபுத்தூர்

News image
Updated On :13 டிசம்பர் 2015, 9:38 am

கோ.ஜெயக்குமார்

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கடலூர் மாவட்டத்தின் ஒரு கிராமத்தைத் தத்தெடுத்து, அங்குள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை ஸ்ரீவில்லிபுத்தூர் அரிமா சங்கம் மற்றும் அரிமா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவியர் செய்து வருகிறார்கள்.

இரண்டாம் தவணையாக ரூ.10 லட்சம் மதிப்பிலான அத்தியாவசியப் பொருட்களுடன் மூன்று லாரிகள் சென்றன. இத்துடன் 6 சமையல் மாஸ்டர்கள், 5 அரிமா சங்க உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர் கடலூர் சென்று, தத்தெடுக்கப்பட்டுள்ள கிராமத்தில் இரு நாட்கள் தங்கியிருந்து நிவாரண உதவிகளை செய்து வருவார்கள் என அரிமா சங்க்ததின் தலைவர் ஆர்.பி.ரஞ்சித் கூறினார்.

நிவாரணப் பொருட்கள் அடங்கிய பையில் 10 கிகி அரிசி, சர்க்கரை, புடவை, வேஷ்டி, சட்டை, நைட்டி, லுங்கி, துண்டு, பாய், வலி நிவாரணி, கொசுவர்த்தி, நாப்கின், பிஸ்கட், பிரட், ஜாம், பள்ளிக் குழந்தைகளுக்குத் தேவையான நோட்டு, பென்சில், பேனா உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் உள்ளன.

மொத்தம் 320 பண்டல்கள் நிவாரணப் பொருட்கள் இரண்டாம் தவணையாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் துணைத் தலைவர் கார்த்திக், எஸ்.குணசேகரன், கு.சக்திவேல், எம்.கே.முகமது மைதீன், குலாம் சையத், வி.ஆர்.எஸ்.செந்தில், அரவிந்த், பள்ளி முதல்வர் சுதாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.