இதே வேளையில் இந்த சமூகத்தை சேர்ந்த ஆண்களுக்கும் பெண் பார்க்கும் படலமும் நடைபெறுவது சிறப்பம்சமாகும். இதுகுறித்து காவடிக்குழுவின் தலைவர் மணி, செயலர் தங்கவேல், பொருளாளர் அர்த்தனாரி, அதிமுக மீனவரணி மணி ஆகியோர் தெரிவித்ததாவது, இதுபோன்ற காவடி எடுத்து வரும் நேரத்தில் பெண்ணுக்கு மாப்பிள்ளையும், மாப்பிள்ளைக்கு பெண்ணும் அமைவதை சிறப்பான ஒன்றாக இச்சமுதாயத்தினர் கருதுகிறோம். காலை 10 மணிக்கு மேல் பால்காவடி, இளநீர் காவடி, கரும்புக்காவடி, சேவல்காவடி, மயில்காவடி, சர்க்கரைகாவடி என பல்வேறு காவடிகள் எடுத்து வரப்பட்டு பழனிக்கு பட்டிணப்பிரவேசம் செய்து மாலை 3 மணிக்கு மேல் மலையில் காவடிகள் முத்திரை செலுத்தி உச்சிக்காலம், சாயரட்சை கட்டளை, தங்கத்தேர் புறப்பாடு ஆகியவற்றை மேற்கொள்ள உள்ளோம். எங்கள் காவடிக் குழுவுக்கு மட்டுமே ஒருநாள் இரவு மலைக்கோயிலில் தங்கும் உரிமை பிரத்யேகமாக வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.