வந்த பக்தர்கள் கூட்டத்தில் சுமார் 51 பேர் பால்காவடி எடுத்தும், 21 பேர் புஷ்பக்காவடி எடுத்தும், 25க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர் கன்னம், நாக்கில் அலகு குத்தியும் நேர்ச்சை மேற்கொண்டனர். அலகு குத்தும் சாமி கந்தகுமார் ஒவ்வொருவருக்கும் அலகு குத்தும் போது பக்தர்கள் மேற்கொண்ட சாமியாட்டம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. மேள, தாளம் முழங்க நடைபெற்ற அலகு குத்தும் நிகழ்ச்சியில் சென்னை எண்ணூரை சேர்ந்த பார்த்திபன் என்பவர் உடலில் 108 இடங்களில் ஊசியில் நூலை கோர்த்து அதில் எலுமிச்சையை இணைத்து எலுமிச்சை நேர்த்தி செலுத்தியது பலரையும் பரவசத்தில் ஆழ்த்தியது. இவர் தனது 15 வயது முதலே இந்த நேர்ச்சையை செய்து வருவதாக தெரிவித்தார்.