பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு கடந்த 16 நாட்களில் உண்டியல்கள் நிரம்பியது. இதைத் தொடர்ந்து வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் உண்டியல்கள் திறக்கப்பட்டு மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் வைத்து எண்ணப்பட்டது. இருநாட்கள் எண்ணிக்கையில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய ரொக்கப்பணம் வரவு ரூபாய் மூன்று கோடியே 44 இலட்சத்து 6 ஆயிரத்து 667 கிடைத்தது. உண்டியலில் பக்தர்கள் தங்கத்தாலான காசுகள், தாலி, செயின், வேல், உருவங்களும், வெள்ளியால் ஆன குடம், வேல், உருவம், கொலுசுகள், பார் வெள்ளி, சுவாமி உருவம் போன்றவற்றையும் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். தங்கம் 839 கிராமும், வெள்ளி 19 ஆயிரத்து 891 கிராமும் கிடைத்தன. மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாட்டு கரன்சிகள் 533 ம் வரப்பெற்றன.