சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலைக்கு கூண்டு: எதிர்ப்பு தெரிவித்து தடுத்த 4 பேர் கைது
சிதம்பரம் நகரில் அம்பேத்கர் சிலைக்கு இரும்பு கூண்டு அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பணி செய்யவிடாமல் தடுத்ததாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் 4 பேரை நகர போலீஸார்


சிதம்பரம் நகரில் அம்பேத்கர் சிலைக்கு இரும்பு கூண்டு அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பணி செய்யவிடாமல் தடுத்ததாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் 4 பேரை நகர போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
சிதம்பரம் நகராட்சி பகுதியான 1வது வார்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு தமிழகஅரசு உத்தரவுப்படி பாதுகாப்பு நலன் கருதி இரும்பிலான கூண்டு அமைக்கப்படவுள்ளது. வியாழக்கிழமை நகராட்சி ஊழியர்கள் போலீஸ் பாதுகாப்புடன் கூண்டு அமைக்கச் சென்றனர். அப்போது விடுதலைச் சிறுத்தைகள்
கட்சி நகரமன்ற உறுப்பினர் பெரு.திருவரசு தலைமையில் சுமார் 25 பேர் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து நகர போலீஸார் கூண்டு அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தியதாக பெரு.திருவரசு, சரித்தரன், குறிஞ்சிவளவன் உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர். மேலும்
இதுகுறித்து நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...