ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

விராலிமலை அருகே மயங்கி கிடந்த 2 மயில்கள். தீயணைப்பு துறையினரின் முயற்சியால் உயிர் பிழைத்தது

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை இலுப்பூர் சாலை  தாமரை ஊரணிக்கு அருகே விவசாய தோட்டத்தில் புதன்கிழமை மாலை மயங்கி கிடந்த இரண்டு மயில்களை தீயணைப்பு துறையினர் மீட்டனர் 

News image
Updated On :26 பிப்ரவரி 2015, 5:18 am

சி. உதயகுமார்

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை இலுப்பூர் சாலை  தாமரை ஊரணிக்கு அருகே விவசாய தோட்டத்தில் புதன்கிழமை மாலை மயங்கி கிடந்த இரண்டு மயில்களை தீயணைப்பு துறையினர் மீட்டனர் 

தாமரை ஊரணியைச் சேர்தவர் பிரசாத்குமார், இவர் பிப், 25 ம்தேதி மாலை தனக்கு சொந்தமான  தோட்டத்து வேலியில் 2 ஆண் மயில்கள் மயக்கமடைந்த நிலையில் முள்வேலியில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததை பார்த்துள்ளார், பின்னர்  இது குறித்து  இலுப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து  நிலைய அலுவலர் ஏ. சகாயராஜ், சி. காமராஜ் (போக்குவரத்து) உள்ளிட்ட தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்திற்கு சென்று மயக்கமடைந்த நிலையில் முள்வேலியில் சிக்கி உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 2 தேசிய பறவையான  மயில்களை மீட்டு, இலுப்பூர்  நவம்பட்டி கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சையளித்ததை தொடர்ந்து  2 மயில்களுக்கும் உயிர் பிழைத்ததை தொடர்ந்து வனத்துறையினரிடம் அம்மயில்கள் ஒப்படைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.