ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் பரமபதவாசல் திறப்பு
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஆண்டாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நடைபெற்ற பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சியை ஏராளமான பக்தர்கள் கண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஆண்டாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நடைபெற்ற பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சியை ஏராளமான பக்தர்கள் கண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
ஆண்டாள் கோவிலில் அத்யயன உற்சவத்தில் பகல் பத்து உற்சவம் நிறைவடைந்து ராப்பத்து உற்சவம் வியாழக்கிழமை தொடங்கியது. 1-ம் திருநாள் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு காலை 7.40 மணிக்கு பரமபதவாசல் திறக்கப்பட்டது.
பெரியாழ்வார், நம்மாழ்வார், ராமானுஜர், திருமங்கையாழ்வார், வேதாந்ததேசிகர் ஆகியோர் எதிர்கொண்டு அழைக்க, பரமபதவாசல் வழியே முதலில் வடபத்ர சயனரும் அவரைத் தொடர்ந்து ஆண்டாள்-ரெங்கமன்னாரும் வந்தனர். பின்னர் பக்தர்கள் பரமபதவாசல் வழியே வந்தனர்.
முன்னதாக சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகளை ரகுபட்டர் நடத்தினார். நிகழ்ச்சியில் கோவில் தக்கார் கே.ரவிச்சந்திரன், நகர்மன்றத் தலைவி வி.செந்தில்குமாரி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித் தலைவர் வி.டி.முத்துராஜ், கோவில் ஸ்தானிகம் ரமேஷ் (எ) ரெங்கராஜன், வேதபிரான் பட்டர், சுதர்ஸன் பட்டர் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன் செய்திருந்தார். காவல் துணைக் கண்காணிப்பாளர் முரளிதரன் தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...