இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் 126 பள்ளி மாணவர்களுக்கு அரசின் விலையில்லா புத்தகங்கள்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் சரகத்தில் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் உள்ள 126 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்  மூன்றாம் பருவம் தொடங்கிய அன்றே 10,503 மாணவ மாணவியருக்கு அரசின் விலையில்லா புத்தகங்கள் வழங்கப்பட்டது.

News image
Updated On :2 ஜனவரி 2015, 6:28 am

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் சரகத்தில் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் உள்ள 126 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்  மூன்றாம் பருவம் தொடங்கிய அன்றே 10,503 மாணவ மாணவியருக்கு அரசின் விலையில்லா புத்தகங்கள் வழங்கப்பட்டது.

2014-15-ம் கல்வியாண்டின் மூன்றாம் பருவம் தொடக்கக் கல்வித் துறையின் உத்தரவின்படி வெள்ளிக்கிழமை தொடங்கியுள்ளது. மாணவர்கள் விடுமுறை முடித்து வந்த அன்றே அரசின் விலையில்லா புத்தகங்களை வழங்க கல்வித் துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கியிருந்தது. இதன்படி விடுமுறை நாட்களில் புத்தகங்களை தலைமை ஆசிரியர்கள் பெற்று பள்ளிகளில் இருப்பு வைத்திருந்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் சரகத்தில், நரையன்குளம் ஒத்தப்பட்டி நடுநிலைப் பள்ளியில் அரசின் விலையில்லா புத்தகங்கள் வழங்கும் பணியை வெள்ளிக்கிழமை உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் சி.பாலமுருகன் தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் கூறுகையில் சரகத்தில் உள்ள 126 பள்ளிகளில் படிக்கும் 10,503 மாணவ மாணவியருக்கு 3-ம் பருவம் தொடங்கிய அன்றை அரசின் விலையில்லா புத்ககங்கள் வழங்கப்பட்டுவிட்டது என்றார். நிகழ்ச்சியில் கிராம கல்விக் குழு தலைவி அ.சீத்தாலட்சுமி, பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவி அ.கனியம்மாள், தலைமை ஆசிரியை இ.ஜெஸிந்தா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.