தற்செயல் சிறுவிடுப்பு போராட்டம்: வெறிச்சோடிய சிதம்பரம் வட்டாட்சியர் அலுவலகம்
புதிய பென்ஷன் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், 50 சதவீத அகவிலைப்பட்டியை ஊதியத்துடன் இணைக்க வேண்டும், 7-வது ஊதிய மாற்றத்தில் உள்ள


வருவாய்த்துறை அலுவலர்களின் தற்செயல் விடுப்பு போராட்டத்தால் சிதம்பரம் வட்டாட்சியர் அலுவலகம் வியாழக்கிழமை வெறிச்சோடி கிடந்தது.
புதிய பென்ஷன் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், 50 சதவீத அகவிலைப்பட்டியை ஊதியத்துடன் இணைக்க வேண்டும், 7-வது ஊதிய மாற்றத்தில் உள்ள குறைபாடுகளை களைதல் வேண்டும், பணிநீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் வியாழக்கிழை ஒருநாள் தற்செயல் விடுப்பு எடுத்து பணிகளை புறக்கணித்தனர். இதனால் சிதம்பரம் வட்டாட்சியர் அலுவலகம் வெறிச்சோடி கிடந்தது.
இதனால் வட்டாட்சியர் அலுவலகத்தில் எவ்வித பணியும் நடைபெறவில்லை. இதனால் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...