கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இனி ஆய்வேடுகள் ஆய்விற்கு உட்படுத்தப்பட்ட பின்னரே ஏற்கப்படும்: நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இனி ஆய்வேடுகள் ஆய்விற்கு உட்படுத்தப்பட்ட பின்னரே ஏற்கப்படும்: நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா

News image
Updated On :24 ஜனவரி 2015, 11:54 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சமர்பிக்கப்பட்ட ஆய்வேடுகளும், சமர்பிக்கப்படும் ஆய்வேடுகள் நகலெடுத்து பயன்படுத்தும் முயற்சியை தடுக்கும் வகையில், பல்கலைக்கழகத்தில் சமர்பிக்கப்படும் அனைத்து ஆய்வேடுகளும் சோத்சங்கா திட்டத்தின் மென்பொருள் ஆய்விற்கு உட்படுத்தப்பட்ட பின்னரே ஏற்கப்படும் என பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா தெரிவித்துள்ளார்.

அண்ணாமலைப் பல்கலைக்கழக நூலத்தில் நிறுவனத்தகவல் தளத்தின் மூலம் பாடத்திட்டங்களும், வினாத்தாள்களும் ஆய்வுக்கட்டுரைகளும் வழங்கப்பட்டு வருகிறது.  பல்கலைக்கழகத்தில் சமர்பிக்கப்படும் அனைத்து முனைவர் பட்ட ஆய்வேடுகளையும் மென்பொருளின் ஆய்விற்கு உட்படுத்தப்பட்ட பின்னரே பல்கலைக்கழகம் ஏற்கும் வகையில் பல்கலைக்கழக மானியக்குழுவின் தகவல் மற்றும் நூலக இணையத்தின் புதிய சேவையாக சோத்சங்கா என்ற திட்டத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து புதிய திட்டத்தை தொடங்கியுள்ளது. பல்கலைக்கழக நிர்வாகியும், தமிழக அரசு முதன்மைச் செயலருமான ஷிவ்தாஸ்மீனா புதிய சோத்சங்கா திட்டத்தை வெள்ளிக்கிழமை பல்கலைக்கழக நூலகத்தில் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பதிவாளர் முனைவர் ந.பஞ்சநதம், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஏ.ரகுபதி, வேளாண்புல முதல்வர் ஜே.வசந்தகுமார், கலைப்புல முதல்வர் ஆர்.ராஜேந்திரன், கல்விப்புல முதல்வர் என்.ஒ.நெல்லையப்பன், நிதிஅலுவலர் பி.பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பேராசிரியர் மற்றும் நூலக அறிவியல்துறை தலைவர் முனைவர் எம்.நாகராஜன் மற்றும் நூலக அலுவலர்கள் செய்திருந்தனர்.

இதுகுறித்து பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா தெரிவித்தது: இதுவரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சமர்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகளும், இனிமேல் சமர்பிக்கப்படும் ஆய்வுக்கட்டுரைகளும் சோத்சங்கா திட்டத்திற்கு அனுப்பி வைக்கப்படும். இதன்மூலம் நம் நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களில் சமர்பிக்கப்பட்ட முனைவர் பட்ட ஆய்வேடுகளை காணமுடியும். மேலும் ஆய்வுக்கட்டுரைகள் நகலெடுத்து அப்படியே பயன்படுத்தும் முயற்சியினை தடுக்கும் வகையில் பல்கலைக்கழக மானியக்குழுவின் ஐதண்டிகேட் (ithendicate) என்ற மென்பொருள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது என ஷிவ்தாஸ்மீனா தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.