கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

ஸ்ரீமுஷ்ணத்தில் கோயில் பதாகையை கிழித்த சப்-இன்ஸ்பெக்டரை கண்டித்து சாலைமறியல், காவல் நிலையம் முற்றுகை

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் கோயில் கும்பாபிஷேக விழா பதாகைகளை கிழித்த சப்-இன்ஸ்பெக்டரை கண்டித்து காவல் நிலையத்தை முற்றுகையிட்டும், சாலைமறியலில் ஈடுபட்டும் பொதுமக்கள் போராட்டத்தில்

News image
Updated On :26 ஜனவரி 2015, 1:57 pm

ஜி.சுந்தரராஜன்

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் கோயில் கும்பாபிஷேக விழா பதாகைகளை கிழித்த சப்-இன்ஸ்பெக்டரை கண்டித்து காவல் நிலையத்தை முற்றுகையிட்டும், சாலைமறியலில் ஈடுபட்டும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் திருபாானாழ்வார் தெருவிலை அமைந்துள்ள ஸ்ரீபாளையத்தம்மன் கோயில் கும்பாபிஷேக விழா கடந்த ஜன.23-ம் தேதி நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு அப்பகுதியில் சாலையோரம் விளம்பர பதாகைகளை பொதுமக்களால் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் ஸ்ரீமுஷ்ணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சக்திகணேஷ் ஞாயிற்றுக்கிழமை இரவு சாலையோரம் இருந்த கும்பாபிஷேக விழா விளம்பர பதாகைகளை கிழித்ததாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து அப்பகுதி மக்கள் பதாகைகளை கிழித்த சப்-இன்ஸ்பெக்டரை கண்டித்து ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு கேட்டனர். அப்போது சப்-இன்ஸ்பெக்டருக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் சிதம்பரம்-ஸ்ரீமுஷ்ணம் சாலையில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த சேத்தியாத்தோப்பு டிஎஸ்பி சுரேஷ்பாபு, இன்ஸ்பெக்டர் முரளி மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று அப்பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சப்-இன்ஸ்பெக்டர் மீது துறை வாரி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து மக்கள் போராட்டத்தை வாபஸ் பெற்று கலைந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.