தொலைதூரக்கல்வி இயக்கக இயக்குநர் முனைவர் ராம.சந்திரசேகரன் முன்னிலை வகித்துப் பேசினார். தமிழியல் துறை தலைவர் முனைவர் ப.ஞானம் வாழ்த்துரையாற்றினார். முனைவர் பெ.வைரமூர்த்தி நன்றி கூறினார். விழாவில் அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் தமிழ்துறைத் தலைவர் அ.ஆனந்தநடராஜ தீட்சிதர், பேராசிரியர் ஏ.வி.ரங்காச்சாரியார், வடஅமெரிக்காவைச் சேர்ந்த அறவாழி ராமசாமி, அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர்-ஊழியர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் உதயசந்திரன், துணை ஒருங்கிணைப்பாளர் சி.மதியழகன், முன்னாள் ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் பேராசிரியர் டி.ராஜவன்னியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.