கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

திருப்பணிக்கமிட்டி அமைப்பது குறித்து அறிக்கை அளிக்குமாறு, தீட்சிதர்களுக்கு உதவிஆட்சியர் நோட்டீஸ்

சிதம்பரம் நடராஜர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு திருப்பணி கமிட்டி அமைப்பது குறித்து அறிக்கையினை பிப்.8-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என பொதுதீட்சிதர்களின்

News image
Updated On :29 ஜனவரி 2015, 12:14 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் நடராஜர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு திருப்பணி கமிட்டி அமைப்பது குறித்து அறிக்கையினை பிப்.8-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என பொதுதீட்சிதர்களின் செயலாளருக்கு, சிதம்பரம் உதவிஆட்சியர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

சிதம்பரம் கீழரதவீதியில் வசிக்கும் ஆர்.யு.கனகசபேச தீட்சிதர் என்பவர் சிதம்பரம் உதவிஆட்சியருக்கு மனு ஒன்று அனுப்பியுள்ளார். அந்த மனுவில் சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் நிர்வகிப்பது சம்பந்தமாக உச்சநீதிமன்றத்தில் கடந்த 6-1-2014 அன்று தீர்ப்பான பிரகாரம் கோயிலுக்கான பழைய 1894ம் ஆண்டு சட்டம் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய விதிமுறைகள் எவ்வித மாற்றம் செய்யப்படாமல் அமுலில் இருந்து வருகிறது.

ஆனால் பொதுதீட்சிதர்கள் சார்பில் அதன் செயலாளரிடம் தற்போது நிர்வாக குறைபாடுகள், விதிமுறை மீறல்கள் உள்ளது என்றும், மே.1-ம் தேதி நடைபெறவுள்ள கும்பாபிஷேகத்திற்கு திருப்பணிக்கமிட்டி அமைக்க வேண்டும் என்றும், 1987-ம் ஆண்டில் ஜி.வாகீசம்பிள்ளை தலைமையில் திருப்பணிக்கமி்ட்டி அமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. எனவே அதேபோல் வருகிற மே.1-ம் தேதி நடைபெற்ற கும்பாபிஷேகத்திற்கு திருப்பணி கமிட்டி அமைத்து ஏழை, எளிய மக்கள் வழங்கும் குறைவான தொகைக்கும் ரசீது வழங்க வேண்டும், மேலும் வரவு மற்றும் செலவு தணிக்கை செய்ய வேண்டும். இனி வரும் காலங்களில் 1894-ம் உச்சநீதிமன்ற சட்டவரைவுப்படி கோயில் நிர்வகிக்கப்பட வேண்டும். இதுகுறித்து பொதுதீட்சிதர்களின் செயலாளரிடம் நான் கொடுத்த மனு கொடுத்து நிராகரிக்கப்பட்டது. எனவே தாங்கள் நடவடிக்கை மேற்கொண்டு திருப்பணி கமிட்டி அமைக்க நடவடிக்க எடுக்க வேண்டும் என மனுவில் ஆர்.யு. கனகசபேச தீட்சிதர் தெரிவித்துள்ளார்.

இம்மனுவை பரிசீலித்த சிதம்பரம் உதவிஆட்சியர் எம்.அரவிந்த், கோயில் பொதுதீட்சிதர்களின் செயலாளருக்கு பிப்.8-ம் தேதிக்குள் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் கனகசபேச தீட்சிதர் கோயில் செயலாளருக்கு கொடுத்த மனு மீதான நடவடிக்கை குறித்த தங்களது அறிக்கையினையும், திருப்பணிக்கமிட்டி அமைத்தது தொடர்பான தங்களது அறிக்கையினையும் வருகிற பிப்.8-ம் தேதிக்குள் இவ்வலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என உதவிஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.