இந்த துணை குழுவில் தமிழகம் சார்பாக, பெரியாறு அணை செயற்பொறியாளர் மாதவன், உதவி செயற்பொறியாளர் சவுந்தரமும், கேரள அரசின் பிரதிநிதிகளாக பெரியாறு மைனர் இரிக்கேஷன் செயற்பொறியாளார் ஜார்ஜ் டேனியல், உதவிப்பொறியாளர் எஸ்.என். பிரசீத் ஆகியோரும் உள்ளனர்.இந்த ஐவர் கொண்டு துணைக்குழு, கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியிருப்பதால், நீர்வரத்து அதிகம் இருக்கும், இந்நிலையில் சனிக்கிழமை முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் வழக்கமாக செய்யும் நீர்வரத்து, வெளியேற்றம், கசிவு நீர்(ஜீபேஸ் அளவு) அளவு போன்றவற்றை ஆய்வு மேற்கொண்டனர். மேலும், அணையிலிருந்து கேரளாவுக்கு திறந்து விடப்படும் 13 மதகுகளில் குறிப்பிட்ட இரண்டு மதகுகளின் இயக்கம் சரிபார்க்கப்பட்டது. துணைக்குழுவின் ஆய்வு பணி மாலை நிறைவடைந்தது.