1979ஆம் ஆண்டு அச்சுதமேனன் கேரளத்தின் முதல்வராக இருந்த காலத்தில் இருந்து இன்று வரை, கடந்த 35 ஆண்டுகாலங்களாக கேரளாவில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் பெரியாறு அணை பலவீனமாக இருக்கின்றது, அதனை உடைக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர். கம்பம் பகுதியில் 2011-ல் ஏற்பட்ட மாபெரும் மக்கள் எழுச்சி போராட்டத்தின் விளைவாக அணை பலவீனமாக இருக்கின்றது என்ற சொல்லை மாற்றிவிட்டு தற்போது, முல்லைப்பெரியார் அணை அருகே புதிய அணை கட்டப்போவதாக சொல்லி அணையின் இருந்து 336 மீட்டர் தொலைவில் கீழ் பகுதியில் புதிய அணைக்கான மண்மாதிரி ஆய்வுகளை எடுத்துள்ளனர்.