புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகேயுள்ள கொடும்பாளூரில் மீனவேலியைச் சேர்ந்த சத்தியம் என்பவர் நகை அடகுகடை வைத்து நடத்தி வருகிறார், வழக்கம் போல் வெள்ளிக்கிழமை கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார், இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு அலாரம் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வெளியே வந்து பார்த்ததில் கடையின் பூட்டை 5 பேர் கொண்ட குழுவினர் உடைத்து கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் கொள்ளையர்களை பிடிக்க முற்பட்டபோது சுதாரித்து கொண்ட கொள்ளையர்கள் தங்கள் வந்த சொகுசு காரில் (ஸ்கார்ப்பியோ) ஏறி தப்பியுள்ளனர், உடனடியாக பொதுமக்கள் விராலிமலை போலீஸாருக்கு தகவல் கொடுத்து விட்டு, கொள்ளையர்களை பின்தொடர்ந்து வந்துள்ளனர்,