ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

அரசு பேரூந்து மோதியதில் தொழிலாளி சாவு

விராலிமலை மதுரை சாலையில் திங்கட்கிழமை இருசக்கர வாகனத்தில் சென்றவர் மீது அரசு பேரூந்து மோதிய விபத்தில் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்

News image
Updated On :9 மார்ச் 2015, 2:01 pm

சி. உதயகுமார்

விராலிமலை மதுரை சாலையில் திங்கட்கிழமை இருசக்கர வாகனத்தில் சென்றவர் மீது அரசு பேரூந்து மோதிய விபத்தில் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்

விராலிமலை அருகேயுள்ள கவரப்பட்டி பரவலையைச் சேர்ந்தவர் நல்லுச்சாமி மகன் அப்பாத்துரை(40) கிணறு வெட்டும் வேலை செய்து வரும் இவர், திங்கட்கிழமை (மார்ச், 9) விராலிமலை வந்த அவர் வாரசந்தையில் வீட்டிற்கு தேவையான காய்கறிகளை வாங்கியுள்ளார், பின்னர் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருக்கையில், விராலிமலை மதுரை சாலை தெப்பகுளம் அருகே வந்த போது மதுரையிலிருந்து திருச்சி நோக்கி வந்த அரசு பேரூந்து கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனம் மீது மோதியதில் தலையில் பலத்த காயமடைந்த அப்பாத்துரை மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்,

இதுகுறித்து விராலிமலை போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.