வேளாண் உற்பத்தி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 20,347 விவசாயிகளுக்கு ரூ.6.34 கோடி முதலீட்டு மானியமாக தரப்பட்டுள்ளது. தேசிய கால்நடை திட்டத்தின் கீழ் நிதி உதவி பெற மாநில கால்நடைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கால்நடை காப்பீடு, தீவன மேம்பாடு, கோழி இனப்பெருக்க உள்கட்டமைப்பு, வசதிகள் செய்யப்படும். 47600 மெ.டன் பாலும், 11 மில்லிட் முட்டைகளும் உற்பத்தி செய்யப்பட்டன. குடிமைப் பொருள், கூட்டுறவு குடிமைப் பொருள் வழங்கல் துறையில் ஆதார் அட்டையுடன் இணைந்த ஸ்மார்ட் கார்ட் வழங்கும் பணி நடந்து வருகிறது. புதுவை, காரைக்கால் பகுதிகளில் இலவச அரிசிக்கு பதிலாக ரூ.300 ரொக்கம் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். வணிகரித்துறையின் கீழ் கடந்த 2014-15-ல் ரூ.1320 கோடி வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூட்டுறவுத் துறையில் கூட்டுறவு சர்க்கரை ஆலை செயல்பட்டுக்கு ரூ.10.53 கோடி நிதி வழங்கப்பட்டது. பால் பதனிடும் திறனை அதிகப்படுத்த ரூ.3.3 கோடியில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மின்துறை மின்துறையில் முன்னோடித் திட்டமாக ரூ.46.11 கோடி செலவில் 87075 எலக்ட்ரோ